லஞ்சம் நம் நாட்டில்
அடைந்துவிட்டது தஞ்சம்
ஊழல் செய்யும் எத்தர்களுக்கு
வித விதமாக மஞ்சம்
தினம் பாடுபடும் மக்கக்ளுகோ
அடுக்கடுக்காக வஞ்சம்
லஞ்சம் இல்லா நிலைகளை
பார்க்க துடிக்குது தினம் நெஞ்சம்
ஒட்டு கேக்க வரும்போது தலை
வெளியே காட்டுவார் கொஞ்சம்
வோட்டு வாங்கி உயரே இருப்பவர்
ஒருவருக்கொருவர் போட்டி போடும் கஞ்சன்
கல்லூரியிலே லஞ்சம்
கடை வீதியிலும் லஞ்சம்
ஆக பூர்வ வேலைகளுக்கெல்லாம்
அளவிலாத லஞ்சம்
எல்லாவற்றிலும் கலப்படம் -லஞ்சத்தால்
எடுத்து கேட்க மனம் அல்லல் படும்
லஞ்சம் எனும் பெரும் சுமையாலே -நாடு
வளர்ச்சியின்றியே அவதிப்படும்
வீரமாக பேசிடுவர் நேரில்
விளக்கம் கேட்டால் எசிடுவர்
தவறுகளை தட்டிக்கேட்பவர்
முகத்திலே கரி பூசிடுவர்
உரிமை குரல்தனை எழுப்பிடுவோம்
ஊழலாளிகளை அழித்திடுவோம்
கருப்பு பணத்தை வெளியே கொணர்ந்து
தாய் திரு நாட்டை காத்திடுவோம்

No comments:
Post a Comment