Tuesday, 22 November 2011

மே தினம்



உள்ளத்தின் குமுறலை ஒளியாக்கி
உலகத்தின் பார்வையை திசை மாற்ற
எண்ணத்தில் எல்லோரும் ஒன்றாக
எழுப்பிடும் ஓசையே மே தினம்

உழைக்கின்ற வர்கங்கள் ஒன்றாக
உரிமை குரல்தனை எழுப்பிட
எத்தடை வந்தாலும் எதிர்நோக்கி
எழுகின்ற நாளன்றோ மே தினம்

தொழிலாளர் குருதியை பணமாக்கி
சுக வாழ்க்கை வாழ்ந்திடும் முதலாளி
முக மூட்டி கிழித்தே வெளியேற்ற
எழுச்சியின் புரச்சியே மே தினம்

தொழிலாளி உயர்ந்திட போராடி
உயிர் விட்ட ஒப்பற்ற  தியாகிகள்
குருதியில் ஊறிய கொடியையே
உலகிற்கு தந்திட்ட  மே தினம்

செங்கொடி பட்டொளி வீசிட
செங்குருதியின் பயனை நாம் அடைந்திட
மே தினம் போற்றியே வணங்குவோம்
மேதினி போற்றிட வாழுவோம்


 

No comments:

Post a Comment