
விலைகள் ஏறுது ரகேட்டிலே
பணம்தான் இல்லை நம் பாக்கெட்டுலே
அரசியல்வாதிகள் பேச்செல்லாம்
ஆதாயம் தேடும் நோக்கத்திலே
அம்மா பசியென
வாடிடும் மக்கள்
விலைகள் குறையுமா
என்ற ஏக்கத்திலே
ஆளுக்கு ஒரு கட்சி
மூளைக்கு ஒரு கட்சி
அவரர் கொடிகளும்
பறக்குது உயரத்திலே
ஆதரவின்றி அல்லல்
படும் ஏழை
அகாரம் இன்றி
தவிக்குறான் துயரத்திலே
எடுத்ததுக்கெல்லாம் ஒரு இயக்கம்
அரசிடம் எடுத்து கேட்கவே தயக்கம்
ஏறிடும் விளைவாசியினாலே -ஏழை
பசியால் அடையுறான் மயக்கம்
நல்ல திட்டத்தை வகுத்திடுங்கள்
ஏழை நிலைதனை கருதி
இல்லையேல் மானுடம் பசியால்
அழிந்திடும் இது உறுதி
ஏக்கம்
-------------
காலம் என் நெஞ்சத்தை வருடும்
காலனை ஒத்த விலைகளினாலிலே
உருப்படியின் விலைகளை கேட்டால்
உயிருள்ள ஜீவனும் உரையும்
உயரத்தில் தெரிவதெல்லாம் உரமற்று
உயர்ந்துவிட்ட உளமற்ற விலையேற்றம்
எண்ணினால் எதிர்காலத்தை
எண்ணங்கள் மறக்கும் இவ் உலகத்தை
என்றுதான் மாறும் இன்றைய நிலை
எல்லோருக்கும் தோன்றும் இன்பத்தின் கலை
விலை வாசி குறையுமா என்றே ஏக்கம்
அதுவரை இல்லையே ஏழைக்கு தூக்கம்

No comments:
Post a Comment