Thursday, 10 November 2011

அவளும் ஆணுக்கு நிகரே

பெண்கள் என்றிடில் அவள்
பேதை இல்லையே
பேறுகள் பெற்ற  பல
மேதை இல்லையோ

வாய்ப்பு கிட்டிடின் பெண்
வானை எட்டுவாள்
பாட்டில் பாரதி அன்று
பாடி  வைத்தாரே

அடிமை என்று நாம்-அவளை
அடக்கிடலாமோ
ஆளத  தகுந்தவள் -என்பதை
மறந்திடலாமோ

உன்னை பெற்றவள்  -உன்
மகனை பெற்றவள்
தன்னை பணயமாய்  -வைத்து
தாயும் ஆனவள்

விண்ணை எட்டிட்டால்  -இன்று
விதியை வென்றிட்டாள்
கல்வி பெற்றிட்டால்  -பல
கலையும் கற்றிட்டாள்

ஆணுக்கு நிகரென -அவளும்
நிமிர்ந்த்திட்டால்
வீணுக்கு நீயும் -அவளை
வீழ்த்தி பேசாதே ..

No comments:

Post a Comment