Thursday, 10 November 2011

சமுதாயத்தின் சாபக்கேடு

அன்னையை போல் ஒரு
தெய்வம் இல்லை
தன்னையே தாய்க்குலத்திற்கு
அர்ப்பணிப்பேன் என்று
வாய் வீராப்பாக பேசிடுவார்

தாலி கட்டிய மனைவி
தான்  வரும்போது
தனம் கொண்டு வரவில்லை என
ஏசிடுவர்

பெண்கள் எந்திரமாக உழைத்திடனும்
எது கேட்டாலும் கொடுத்திடனும்
எனும் தந்திரவான்கள் தரனில
தல வெளியே காட்ட  விடலாமா

தேவதை வரும் மனைவி
சீதனம் கொண்டு வராவிடில்
கேவலமாக பேசும் மனிதன் தான்
தீவிர தேச துரோகிகளே

வரதட்சிணை கொடுமையினால்
வாடிடும் ஏழை பெண்களுக்கு
வாழ்வளிக்க வருபவரே -இவ்
வையகம் தனிலே  சிறந்தவரே

பெண்கள் கொடுமை ஒழிந்திடனும்
(வரன் ) தட்சிணை அழிந்திடணும்
இளைய சமுதாயம் ஒன்று கூடி -இச்
சாபக்கேட்டை கலைந்திடனும்   

No comments:

Post a Comment