இந்நாட்டு மன்னரெல்லாம்
சாக்கடை ஓரத்திலே
சாப்பாட்டுக்கு வழியின்றி
வாடுகின்றனர்
ஒருவேளை உணவுக்கு
உயிரோடு போராடி
உருப்படியான வழி
தேடுகின்றனர்
நாளெல்லாம் வெய்யிலிலே
மாட்டை உழைத்தாலும்
உயர்வுக்கு வழியின்றி
தவறான வழியை நாடுகின்றனர்
பிழைப்பிற்கு தடமின்றி
வறுமைக்கு வேலியின்றி
தடம் மாறி வாழ்விலே
வீழ்கின்றனர்
இல்லார்க்கு இல்லாமை தீர
எல்லோரும் முனைந்திடில்
கல்லாமை நீக்கியே நல்லதை
வெள்ளாமை செய்திடுவோம்

No comments:
Post a Comment