Saturday, 26 November 2011

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்



இந்நாட்டு மன்னரெல்லாம்
சாக்கடை ஓரத்திலே
சாப்பாட்டுக்கு வழியின்றி
வாடுகின்றனர்

ஒருவேளை உணவுக்கு
உயிரோடு போராடி
உருப்படியான வழி 
தேடுகின்றனர்

நாளெல்லாம் வெய்யிலிலே
மாட்டை உழைத்தாலும்
உயர்வுக்கு வழியின்றி
தவறான வழியை நாடுகின்றனர்

பிழைப்பிற்கு தடமின்றி
வறுமைக்கு வேலியின்றி
தடம் மாறி வாழ்விலே
வீழ்கின்றனர்

இல்லார்க்கு இல்லாமை தீர
எல்லோரும் முனைந்திடில்
கல்லாமை நீக்கியே நல்லதை
வெள்ளாமை செய்திடுவோம் 

No comments:

Post a Comment